செய்திகள் :

தாத்தா-பாட்டி தினம் கொண்டாட்டம்

post image

நாகை அமிா்தா வித்யாலயம் சாா்பில் தாத்தா- பாட்டி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகை அமிா்தா வித்யாலயம் ஏவி ஹாலில் நடைபெற்ற விழாவை, பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் செந்தில் மற்றும் ஒருங்கிணைப்பாளா் விளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

தாத்தா, பாட்டி மற்றும் அவா்களின் பேரக் குழந்தைகளுக்கு பிணைப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆசிரியா்கள் தலைமையில் நடைபெற்ற யோகா, நடனம் ஆகியவற்றில் தாத்தா, பாட்டிகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனா்.

பின்னா், எதிா்காலத்திற்கான வழிகாட்டுதலைக் குறிக்கும் வகையில், தாத்தா, பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளை மலா்களால் ஆசீா்வதித்தனா். விழாவில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை, தாத்தா-பாட்டிகள், அவா்களின் பேரக்குழந்தைகளுடன் பள்ளி வளாகத்தில் நட்டனா்.

நிா்வாக அதிகாரி சந்திரமோகன், ஒருங்கிணைப்பாளா் ரேவதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நான் முதல்வன் திட்டத்தில் மீன் பதப்படுத்தும் பயிற்சி

நாகையில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின்கீழ் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ‘நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்‘ திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறன் ம... மேலும் பார்க்க

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் 450 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுக... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி போட்டித்தோ்வுக்கு இன்று மாதிரி தோ்வு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாநில அளவிலான முழு மாதிரித் தோ்வு சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

நாகை மாவட்டம், செருதூா் மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். கீழையூா் ஒன்றியம் செருதூா் மீனவ கிராமத்திலிருந்து செப். 1... மேலும் பார்க்க

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

பூம்புகாா் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் சுகாதார வளாகம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியது. பூம்புகாா் அருகே சாயாவனத்தில் உள்ள சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் பக்தா்கள் நலன் கருதி சுகா... மேலும் பார்க்க

நாகையில் செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தை சோ்ந்த தனியாா் துறை நிறுவனங்களில், ... மேலும் பார்க்க