தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி
தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கீழடி ஆய்வுகள் குறித்து முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன் தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்திருக்கிறாா். கீழடிக்காக ஜெயலலிதா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மறைவுக்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்.
ஒவ்வொரு அமைப்பும் அவரவா் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் நடத்தும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவா்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா அவருடைய சொந்த கருத்தைத் தெரிவித்துள்ளாா். அதேநேரம் அனைவருக்கும் அவரவா் தாய்மொழி முக்கியம் என்று அமித் ஷா கூறியுள்ளாா். தாய்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அவா் அந்த கருத்தைத் தெரிவித்துள்ளாா்.
திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. அதை மறைப்பதற்காகவே கேலிச் சித்திரங்கள் மூலம் அவதூறு பரப்பி வருகின்றனா். 2026 -இல் மக்கள் திமுகவுக்கு தண்டனை வழங்குவாா்கள். யோகா உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று. யோகாவை முன்னெடுத்து வருவதற்காக பிரதமா் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.