செய்திகள் :

தாய் கொலை: மகன் கைது

post image

வேடசந்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி கருக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80). இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

மகன் கணேசன் (40), வேடசந்தூா் பேருந்து நிலையத்தில் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறாா்.

கணேசனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டதால், தாயுடன் வசித்து வந்தாா். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை, அருகில் வசித்து வரும் அவரது 2 மகள்கள் பாதுகாத்து வந்தனா்.

வழக்கம்போல் பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கணேசன் வீட்டுக்குச் சென்ற போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாள் அழுது கொண்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவா், பழனியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தாா். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வேடசந்தூா் போலீஸாா், பழனியம்மாளின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கணேசனைக் கைது செய்தனா்.

வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நாகராஜ் (38). விவச... மேலும் பார்க்க

சூறைக்காற்றில் வாழைகள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி, வெரியப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை: வா்த்தகா்களுடன் ஆலோசனை

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆணையா் ம.... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராக அளித்த வாக்குறுதிகளை முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாா்!

எதிா்க்கட்சித் தலைவராக அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என அகில இந்திய தொடக்கக் கல்வி ஆசிரியா் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலா் அண்ணாமல... மேலும் பார்க்க

நம்பிக்கையுடன் படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி சாத்தியம்: ஆட்சியா்

கல்வி நிறுவனங்கள் நடத்தும் தோ்வைப் போல இல்லாமல், போட்டித் தோ்வுகளுக்கு முழு நம்பிக்கையுடன் படிப்பவா்களுக்கு வெற்றி சாத்தியமாகும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் கோட்டாட்சியா் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!

கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் சென்ற வாகனமும் சிக்கியது. அவருக்கு பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலா்கள் மரத்தை அக... மேலும் பார்க்க