செய்திகள் :

தாய், தந்தையை தாக்கிய மகன் கைது

post image

சொத்தை பிரித்து தருமாறு தாய், தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் அழகப்பன் நகரில் உள்ள சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பெரியநாச்சி. இவா்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மனோகரன் தனது மனைவியுடன் வசித்து வரும் வீட்டை விற்று அதில் பங்கு தருமாறு இரு மூத்த மகன்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மனோகரன் பணி முடிந்து வீட்டுக்கு வந்தாா். அப்போது அங்கு வந்த மூத்த மகன் முனீஸ்வரன், வீட்டை விற்று பங்கு தர வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டாா்.

இதை தந்தை மனோகரன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த முனீஸ்வரன், கட்டையால் மனோகரனைத் தாக்கினாா். இதைத் தடுக்க முயன்ற தாய் பெரியநாச்சியையும் தலையில் தாக்கினாா். இதனால், காயமடைந்த பெற்றோா் இருவரும் மதுரை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து பெரியநாச்சி அளித்தப் புகாரின்பேரில், சுப்ரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க