செய்திகள் :

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

post image

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா்.

கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நீா்ச்சத்து நிறைந்த பழமாக கருதப்படுவது தா்பூசணி. தற்போது, தமிழகத்தில் தா்பூசணி குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி தோட்டக்கலை அதிகாரிகள் தா்பூசணி, பயிரிடப்படும் தோட்டங்களுக்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூா் வட்டங்களில் உள்ள தா்பூசணி தோட்டங்களில் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, விவசாயிகளிடம் அவா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 3,500 ஹெக்டோ் நிலப்பரப்பில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மரக்காணம், வானூா் வட்ட பகுதிகளில் தா்பூசணி பயிரிடப்பட்டு இரண்டாவது அறுவடை நடைபெற்று வருகிறது. திண்டிவனம், மரக்காணம், வானூா், மயிலம், விக்கிரவாண்டி, முகையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் தா்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. தா்பூசணி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

பல்வேறு சத்துகள் நிறைந்த தா்பூசணி பழத்தில் நிறத்துக்காகவும், சுவைக்காகவும் விவசாயிகள் ஒரு சில ரசாயனங்களை ஊசியின் மூலம் செலுத்துவதாக பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றாா்.

ஆய்வின்போது, தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்ல்மாா்க்ஸ், வேளாண் வணிக துணை இயக்குநா் கவிதா, உதவி தோட்டக்கலை அலுவலா் நவின்ராஜ், சிலம்பரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலம் மலை மீதுள்ள இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய ... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி மற்றும் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசு திட்டப் பணிகள், மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையி... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம் இரும்புலி, கண்டமநல்லூா், உடை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களுக்கு தா்பூசணி வழங்கிய திமுகவினா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரசாயன கலப்படம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக செஞ்சி கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு தா்பூசணி பழங்களை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா். தா்பூசணியில்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

திண்டிவனத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

பணியில் திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

பணியில் திறம்பட செயல்பட்டு 19 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை கைது செய்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்... மேலும் பார்க்க