செய்திகள் :

திக்வேஷ் ரதியை அவமதித்த ரிஷப் பந்த்: அஸ்வின்

post image

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை கடுமையாக விமர்சித்து அஸ்வின் பேசியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் லக்னௌ வீரர் ரன் அவுட் செய்தார். இதனை லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் வேண்டாம் என நடுவரிடம் முறையிடுவார்.

இது போட்டியையே மாற்றிய தருணமாக இருந்தது. ஜிதேஷ் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றதுடன் குவாலிஃபயர் 1-க்கு தகுதிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

மோசமான கேப்டன் ரிஷப் பந்த்

திக் வேஷ் ரதி பந்துவீசும்போது ஜிதேஷ் வெளியேறாமல் இருந்தார். பின்னர் அது மூன்றாம் நடுவரிடம் சென்று நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அது பிரச்னை இல்லை. ஆனால், இதனை ரிஷப் பந்த் வேண்டாம் எனக் கூறியது என்ன மாதிரியான ஸ்போர்ட்மேன்ஷிப்? வளருங்கள் ரிஷப் பந்த்!

ஒரு கேள்வி கேட்கிறேன். திக்வேஷ் ரதி உங்களுடைய மகன் என வைத்துக்கொள்ளுங்கள். யார் இந்த விடியோவை பார்த்தாலும் உங்கள் மகனை கோடிக்கணக்கானவர்கள் முன்பாக ரிஷப் பந்த் விமர்சிக்கிறார்.

ரிஷப் பந்த் கேப்டன்சியில் சிறிது எல்லையை மீறிவிட்டார். பொதுவாக பந்துவீச்சாளர்களை பாதுகாப்பதுதான் கேப்டனின் வேலை. அவரைச் சிறியவனாக்குவதல்ல.

திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை

ரிஷப் பந்த் இது குறித்து முன்னமே லக்னௌ அணியில் பேசியுள்ளாரா தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் முன்பாக ஒரு இளைஞரை இழிவுப்படுத்தாதீர்கள்.

நாம் வேறு யாருக்காவது அப்படி செய்வோமா? அது ஒரு அவமதிப்பு.

இந்த நிகழ்வு திவேஷ் ரதியை சிறியவனாக்கியிருக்கும். அவர் மீண்டும் இதனைச் செய்ய மாட்டார். மக்கள் கமெண்ட் செக்சனில் அவரை மீண்டும் செய்யக் கூடாதென்பார்கள்.

அவர் ஏன் செய்யக்கூடாது? திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை. அவர் யாரென்றே தெரியாது. கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் பந்துவீச்சாளரது முடிவை பின் வாங்கினால் அது அவரை அவமதிப்பதாகவே அர்த்தம் என்றார்.

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா அதிரடி; ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டிய... மேலும் பார்க்க

எலிமினேட்டர்: மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த பில் சால்ட்!

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் அசத்தியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் கிடையாது என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அ... மேலும் பார்க்க

இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் ... மேலும் பார்க்க