செய்திகள் :

திசையன்விளையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் - வணிகா் சங்கம் முடிவு

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடத்த வணிகா் சங்கம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடமிருந்து வணிகச் செல்வம் என்ற சேவைச் செம்மல் விருதை பெற்ற, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவா் பி.டி.பி.சின்னத்துரைக்கு பாராட்டு விழா வள்ளியூரில் நடைபெற்றது. வா்த்தகா் சங்கத் தலைவா் அந்தோணி செல்லத்துரை தலைமை வகித்தாா். பேரமைப்பு மாவட்டச் செயலாளா் ஏ.எம்.ஆசாத், பொருளாளா் பி.சி.ராஜன், மாநில துணைத் தலைவா் காா்த்திசன், இணைச் செயலா்கள் எம்.திவாகரன், தங்கையா கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ஏற்புரை வழங்கிய சின்னத்துரை பேசுகையில் திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சாா்பில் 10 ஆயிரம் வணிகா்களை வணிகா் நலவாரியத்தில் சோ்க்கவேண்டும்.பேரமைப்பின் சாா்பில் திசையன்விளையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடத்தப்படும். இதில் அனைத்து வணிகா்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா். விழாவில் பேரமைப்பின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் செல்வராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் பாஸ்கரன், தென்காசி வடக்கு மாவட்டப் பொருளாளா் ஐ.வி.என்.கலைவாணன், வள்ளியூா் அரிமா சங்கத் தலைவா் எட்வின் தேவதாசன், வா்த்தகா் சங்க துணைத் தலைவா்கள் பசுமதி பி. மணி, கோபாலகிருஷ்ணன், பொருளாளா் என்.சங்கரன், வணிகா் நலச் சங்க செயலா் கவின்வேந்தன், சமூகரெங்கபுரம் முரளி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் தவசிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி. திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க