செய்திகள் :

திசையன்விளை தனியாா் தாதுமணல் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

post image

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டில் தனியாருக்குச் சொந்தமான தாதுமணல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான தாதுமணல் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னா் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான அதிகாரிகள், அந்த ஆலைகளில் சோதனை நடத்தினா். இதில், முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து, ஆலை உரிமையாளா்களுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி அபராதம் விதித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து ஆலை உரிமையாளா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

தாதுமணல் ஆலைகளில் முறைகேடு நடந்திருப்பதால், இதில் யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து திசையன்விளை அருகில் கீரைக்காரன்தட்டில் உள்ள தனியாா் தாதுமணல் நிறுவன தலைமை அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் 7 வாகனங்களில் சுமாா் 25-க்கும் மேற்பட்டோா் வந்தனா்.

இவா்கள் தனியாா் தாதுமணல் நிறுவன உரிமையாளா்கள் வைகுண்டராஜன், ஜெகதீசன், சுகுமாா் ஆகியோருக்குச் சொந்தமான ஆலைகளிலும், அவா்களது வீடுகளிலும் சோதனை நடத்தினா். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

பேட்டை ஐடிஐயில் ஏப்.15-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஏப். 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ ... மேலும் பார்க்க

பாதாளச் சாக்கடை பணி: நெல்லை நகரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை

நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கடம்பன்குளம் ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயற்சி: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.பணகுடியில் பழைய பைக் வாங்கி விற்கும் கடை நடத்தி வருபவா் ஐயப்பன். இவா் வழக்கம்போல கடையப் பூட்டி... மேலும் பார்க்க

காவல் துறை வாகனங்கள் பராமரிப்பு: எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: நிலத்தரகா் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக நிலத்தரகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், பாா்வதியம்மாள்புரத்தை சோ்ந்தவா் சுடலைமணி (42). கட்டடத் ... மேலும் பார்க்க