செய்திகள் :

திடீர் சந்திப்பு; புதிய இணைப்புக்கு தயாராகும் முக்கியப் புள்ளிகள்? - பின்னணி என்ன?

post image

தேர்தல் சமயத்தில் கட்சி மாறும் காட்சிகள் வழக்கமானவை. பெரிய கட்சிகள் தங்களின் எதிர் முகாமை பலவீனப்படுத்த மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்களை தங்கள் பக்கமாக இழுக்க தனி வியூகமே வகுப்பார்கள். அந்தவகையில், இரண்டு முக்கியமான கட்சிகளில் அதிருப்தியாளர்களாக ஒதுங்கி விலகியிருந்தவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆளும்தரப்பு மும்மரம் காட்டி வருகிறதாம்.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இதனால் ஓபிஎஸ் இன் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் பக்கமாக ஒதுங்கியிருந்தார். ஓபிஎஸ் இன் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால் அங்கும் மும்மரம் காட்டாமல் இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். அவர் தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருந்ததாக தகவல்களும் வெளியானது.

தவெக பக்கம் சரியான சிக்னல் கிடைக்காததால் எந்த முடிவையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மட்டுமே பேசி வந்தார். இதைக் கவனித்த சூரிய கட்சி தரப்பு மருது அழகுராஜிடம் பேச ஒரு டீமை அனுப்பியிருக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக போக சூரியக் கட்சியை நோக்கி நகரும் முடிவில் இருக்கிறாராம் மருது அழகுராஜ்.

காளியம்மாள்
காளியம்மாள்

அதேமாதிரி, நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய காளியம்மாளும் சில மாதங்களாக எந்தப் பக்கமும் செல்லாமல் அமைதி காத்து வந்தார். இரண்டு பெரிய கட்சிகளிலிருந்துமே அவருக்கு அழைப்பு வந்ததாகவும், பனையூர் தரப்பையுமே காளியம்மாள் சந்தித்ததாகவும் தகவல் உண்டு. அங்கு நடந்த பேச்சுவார்த்தையும் அவருக்கு அப்செட்டில் முடிந்ததாம். இதனால் அமைதியாக ஒதுங்கியிருந்த அவரையும் சூரிய கட்சியின் ஒரு டீம் அணுகியிருக்கிறது. காளியம்மாள் எதிர்பார்க்கிற விஷயங்கள் கிடைப்பதால் ஏறக்குறைய அவரும் அங்கு நகரும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.

மருது அழகுராஜ் - காளியம்மாள்
மருது அழகுராஜ் - காளியம்மாள்

மருது அழகுராஜ், காளியம்மாள் இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்தும் பேசியிருக்கின்றனர். தாங்கள் இணையப்போகும் புதிய முகாமை பற்றிதான் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் சொல்கிறது இருவருக்கும் நெருக்கமான தரப்பு.

`கண்கவர் வண்ண விளக்குகள்' - தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் | Photo Album

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தூத்துக்குடி விமான நிலையம் புதிய முனையம்.! மேலும் பார்க்க

"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை

தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கட்டியெழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சி இன்று (ஜூலை 27) நடைபெற்றது.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்த பி... மேலும் பார்க்க

”தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது”- தூத்துக்குடியில் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், விமான நிலையத்தில் உள்ள புதிய முனையக் கட்டடத்தின் உள்ளே நடந்து சென்று பார்வையிட... மேலும் பார்க்க

"அரசியல் ஸ்டன்ட்... அல்வா" - `உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை விமர்சிக்கும் செல்லூர் ராஜூ

" ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுள்ளார். செல்லூர் ராஜூமதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்ட... மேலும் பார்க்க

"கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியை பகிர்ந்து அளித்தால்தான் ஊழல் நடைபெறாது" - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

"சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சி, திமுக ஆட்சி" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகு... மேலும் பார்க்க

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

* மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார் திரெளபதி முர்மு! * Bihar வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் காணவில்லையா?* Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட... மேலும் பார்க்க