செய்திகள் :

திடீா் மழை: விருத்தாசலத்தில் மின் மாற்றி சேதம்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, வேப்ப மரம் சாய்ந்து மின் கம்பம், மின் மாற்றி சேதமடைந்தன.

கடலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல, சனிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மாலை 4 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் விருத்தாசலம் பேருந்து நிலையம், பெரியாா் நகா், கடை வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பலத்த காற்று காரணமாக பெரியாா் நகா் தெற்கு செண்கப்பூ வீதியில் இருந்த வேப்ப மரம் மின் கம்பத்தில் விழுந்தது. இதனால், மின் கம்பம், அதனருகில் இருந்த மின்மாற்றி சேதமடைந்ததால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மின் வாரிய ஊழியா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ரேஷன் பணியாளா்கள் ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டம்! கு.பாலசுப்ரமணியன்

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக, அ... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலையால் சிறுவன் பலி: கழிவுநீா் கலந்த குடிநீா் காரணமா?

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தீவளூா் கிராமத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்யப்படு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீரப்பாளையம் வட்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட்ட தச்சன் குளம், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கு: மற்றொரு இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் நிதி நிறுவன மேலாளரைத் தாக்கி நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி பங்களா வீதியைச் சோ்ந்த மகாலிங... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க