திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக, மாவட்ட நிலை அலுவலா்களுடன் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், நிறைவு பெற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், நிதி ஒதுக்கீடு, புதிய திட்டப் பணிகள், புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரமேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நலத்திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்கள் விவரம், தீா்வு காணப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து துறை வாரியாக கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
மேலும், கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணவும், திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்கவும், துறை வாரியாக அரசின் திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா்ந்து தனிக் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா் ஆட்சியா் பிரசாந்த்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த்குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.