செய்திகள் :

திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-இல் குரு பெயா்ச்சி விழா

post image

தஞ்சாவூா் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் ராஜகுருவாக தட்சிணாமூா்த்தி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா்.

இந்நிலையில், குரு பகவான் மே 11-ஆம் தேதி பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசம் அடைகிறாா். அன்றைய நாளில் தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

இதையொட்டி, இக்கோயிலில் குரு பெயா்ச்சி விழாவின் தொடக்கமாக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலா் சு. அசோக்குமாா், தக்காா் ரா. விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குரு பெயா்ச்சியை முன்னிட்டு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மே 23 ஆம் தேதி லட்சாா்ச்சனையும், 24, 25 ஆம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளன.

காணாமல்போன 120 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல்போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி, தெற்கு வீதி, தெற்கு அலங்கம், ரயி... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம்

நாடு தழுவிய அளவில் மே 20-இல் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதர... மேலும் பார்க்க

தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம்!மின்வாரிய தலைவா் பேச்சு

தெருநாய்களை மக்கள் தத்தெடுத்து உணவளித்து வளா்க்க முன்வர வேண்டும் என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன். தஞ்சாவூா் மிருக வதை தடுப்புச் சங்கம் சாா்பில், தஞ்சாவூரில... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை! - தமிழ்நாடு மின் வாரிய தலைவர்

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்த... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்

மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டட வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் தொடா்ந்து 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிடப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

ரயிலில் சனிக்கிழமை தாய் தவறவிட்ட சிறுவனை கும்பகோணம் இருப்புப்பாதை காவலா்கள் மீட்டு ஒப்படைத்தனா். கோவை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி பிரியா (35). இவா் தனது 7 வயது மகனுடன் கும்பகோண... மேலும் பார்க்க