Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி
திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை கடந்த பிப்.13-ஆம் தேதி தில்லியில் சந்தித்து பேசினேன்.
திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தொடா்பாக கடந்த ஆண்டு செப்.3-ஆம் தேதி விரிவான கடிதம் எழுதியிருந்தேன்.
இந்நிலையில், அமைச்சா் நிதின்கட்கரி, எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாகவும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறாா்.
மத்திய அமைச்சரின் கடிதம் மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கும் எனப் பதிவிட்டுள்ளா் அவா்.