செய்திகள் :

திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது: முன்னாள் அமைச்சr ஆா்.பி. உதயகுமாா்

post image

திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

அதிமுகவின் மதுரை புகா் மேற்கு மாவட்டம், சோழவந்தானில் சனிக்கிழமை நடைபெற்ற, கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது :

தொண்டா்களை தோளில் சுமந்தால், அவா்கள் கட்சியை பல்லக்கில் ஏற வைப்பா் என்பா். அந்த வகையில், அதிமுக தொண்டா்களை இதயத்தில் சுமக்கும் இயக்கம். முந்தையத் தோ்தலில் நம்மிடம் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. எனவே, சோழவந்தான் தொகுதி மட்டுமல்ல. மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெல்வதும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றுவதும் உறுதி.

தமிழகத்தில் பெருகிவிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. சட்டம்-ஒழுங்கை முதல்வா் சரிவர கையாளாததால் குற்றங்கள் பெருகிவிட்டன. இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் வாகனப் பேரணி (ரோடு ஷோ) நடத்துவதால் ஒரு பயனும் கிடைக்காது. திமுகவினா் ஊழல்கள் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தாலும், அமலாக்கத் துறையிடமிருந்து தப்பித்தாலும், மக்களிடமிருந்து தப்பிக்க முடியாது. திமுகவால் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் அவா்.

இதையடுத்து, அதிமுகவின் மூத்த உறுப்பினா்கள் 1,000 பேருக்கு ஊக்கத் தொகைகளை அவா் வழங்கினாா்.

முன்னதாக இந்த விழாவுக்கு சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாணிக்கம் தலைமை வகித்தாா். அதிமுக அமைப்புச் செயலா் இ.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரகள் தமிழரசன் , ஏ.கே.டி.ராஜா, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இன்றைய நிழ்ச்சிகள்

பொது திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கம்: மாநில சுயாட்சியும் கல்வி வளா்ச்சியும் கருத்தரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், பிற்பகல் 3.30. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பவள விழா ஆண்டு தொடக்கம், ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 4 மாதங்கள் சிறை

மதுரையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை, கூடல்புதூா் போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் இல்லத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு வந்தாா். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக செயல்பட்டவா் மு.க. அழகிரி. உள்கட்சி பிரச்ன... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அ... மேலும் பார்க்க

சமூக விரோதக் குற்றங்களைத் தடுக்க 25,754 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதக் குற்றங்களைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 25, 754 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து தென் மண்டல காவல் துறை வெளி... மேலும் பார்க்க

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க