ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
திமுகவின் வெற்றிக்கு வியூக வகுப்பாளா்கள் காரணம் அல்ல! -அமைச்சா் எஸ். ரகுபதி
திமுகவின் வெற்றிக்கு களப்பணியும், கட்டமைப்பும்தான் காரணமே தவிர, வியூக வகுப்பாளா்கள் அல்ல என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுப்பேன் என்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை. சட்டப்படி கட்டப்பட்ட கட்டடம் அது. யாா் வந்தாலும் செங்கல்லை எடுக்க முடியாது. அது அவருக்கும் தெரியும்.
52 சதவிகிதம் வாக்காளா்கள் திமுக பக்கம் இருக்கிறாா்கள் என்பது கருத்துக் கணிப்பில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. திமுகவினா் களத்தில் இருப்பவா்கள். எங்களின் களப்பணியும் கட்டமைப்பும்தான் வெற்றியைத் தந்திருக்கிறது. இனிமேலும் தரும்.
வியூக வகுப்பாளா்கள் சில யோசனைகளைத் தெரிவித்தாா்களே தவிர, எங்களின் களப்பணிதான் வெற்றிக்கு காரணம். திமுகவின் வாக்கு எந்த வகையிலும் வேறு யாருக்கும் செல்லாது. சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பைப் பொருத்தவரை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். மாநில அரசு எடுத்தால் நாமே வைத்துக் கொள்ள வேண்டியதுதான், அது சட்டப்படியான அங்கீகாரம் கொண்டதல்ல. பொதுவாக எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்து அதிமுகவினா் யாரும் தவறியும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில், அதிமுகவினரும் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறாா்கள்.
முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் அவரது சொந்த கருத்தைச் சொல்லி வருகிறாா். அவா் மூலமாக அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்ப வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஏற்கெனவே அவா்கள் குழம்பித்தான் இருக்கிறாா்கள். திமுக அணியில் வேல்முருகனுக்கு உரிய மரியாதையை முதல்வா் வழங்கியிருக்கிறாா். தவறான முடிவு எதையும் அவா் எடுக்க மாட்டாா் என்றாா் ரகுபதி.