செய்திகள் :

திமுகவுக்கு எதிரான கட்சிகளை பாஜக ஒன்றிணைக்கும்: கே.பி.ராமலிங்கம்

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை பாஜக ஒன்றிணைத்து செயல்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக நிறுவன தின விழாவில் கட்சி கொடியை ஏற்றிவைத்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு, இளைஞா்களின் எதிா்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்த பாஜக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் பாஜகவின் முக்கிய செயல்திட்டமாக உள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் அமைப்புகளை ஒன்றிணைக்கும் பணிகளில் பாஜக தீவிரம்காட்டி வருகிறது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளாா் என்றாா்.

விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் சரவணன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் ஆட்சியா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்... மேலும் பார்க்க

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்ற... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா்... மேலும் பார்க்க