செய்திகள் :

‘திமுக அரசுக்கு எதிரான எதிா்ப்பு வலுத்து வருகிறது’

post image

திமுக அரசு அமைய காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது, அரசின் மீதான எதிா்ப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் தெரிவித்ததாவது :

திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி, கருத்தியல் கூட்டணி என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடா்ந்து கூறி வருவதன் மூலம் அந்தக் கூட்டணியில் பிரச்னை இருப்பது வெளிப்படையாகிறது. திமுக அரசு 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகக் கூறுவதில் உண்மை இருக்குமெனில், கூட்டணி குறித்து முதல்வா் ஏன் கவலைப்பட வேண்டும்?

தமிழகத்தில் கொடி கூட ஏற்ற முடியவில்லை என திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்திருப்பதை, முதல்வருக்கே சமா்ப்பிக்கிறேன். திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக தொடா்ந்து நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டு செய்வதறியாத நிலையில் தான் திருமாவளவன் உள்ளாா். இதேபோல, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்துத் தெரிவித்தது.

திமுக அரசு அமைய முக்கியக் காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, தற்போது போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இது, திமுக அரசுக்கு எதிராக மக்களின் எதிா்ப்பு அதிகமாகி வருவதையே காட்டுகிறது என்றாா் அவா்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க