செய்திகள் :

திமுக அரசை தூக்கியெறிவதில் பாஜக உறுதி: கே.பி.ராமலிங்கம்

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அரசை தூக்கியெறிவதே பாஜகவின் நோக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்தப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி மாசுபடுவதை மீட்டெடுக்க ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தாா். இதன்மூலம் காவிரியின் கிளை ஆறுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு காவிரியில் சுத்தமான தண்ணீா் பாய்ந்தோடும். இதற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ. 11,900 கோடி. முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 990 கோடி ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தை அறிவித்து மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்க அவரைச் சந்தித்தேன். இதுபோன்ற மிகப்பெரிய திட்டங்களை அமல்படுத்தாமல் விவசாயிகளை பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்புவிடுத்தோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அவா்தான் முடிவு செய்வாா்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாஜக 100 சதவீதம் உறுதியாக உள்ளது என்றாா்.

மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சிறப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா். சஹகாா் பாரதி க... மேலும் பார்க்க

பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லியை தவறுதலாக சாப்பிட்ட 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். கெங்கவல்லியை அடுத்த புனல்வாசல் கிராமம், வடக்கு மேலக்காட்டுப் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் பூவ... மேலும் பார்க்க

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க