செய்திகள் :

திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி

post image

மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திருப்பாலையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை இயக்கம் குறித்த விளக்கக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது :

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 328 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் உள்ள மொத்த வாக்காளா்களில் 30 சதவீதம் பேரை திமுகவின் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இந்தப் பணி வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

திமுக அரசு செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும், அதன் பயன்களையும் மக்களிடையே விளக்கி, உறுப்பினா் சோ்க்கையை மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் வாக்குச் சாவடி முகவா்கள் அனைவரும் இந்தப் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தின் உறுப்பினா் சோ்க்கை, இலக்கை விஞ்சியதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சோமசுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ.... மேலும் பார்க்க

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை ... மேலும் பார்க்க

இந்தியாவில் முன்னணியில் உள்ளது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்! - அமைச்சா் தங்கம் தென்னரசு

நாட்டில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்தான் முன்னணியில் உள்ளது என மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். விருதுநகரில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) சாா்... மேலும் பார்க்க