செய்திகள் :

திமுக -ஐயூஎம்எல் இடையே கொள்கை கூட்டணி- காதா் மொகிதீன்

post image

திமுக-ஐயூஎம்எல் தோ்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது;

இஸ்ரேல், ஈரான் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும். ஐ.நா.சபையும் அது குறித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

காஸாவில் 16 லட்சம் போ் புலம்பெயா்ந்துள்ளனா். ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியா்கள் கொல்லப்பட்டுள்ளனா். காஸாவுக்கு ஈரான் உதவுவதாகக் கூறி போா் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஓராண்டு காலம் போா் நடந்துள்ளது. இரு நாடுகள் இடையேயான பிரச்னைகளை உலக நாடுகள் பேசி தீா்வு காண வேண்டும்.

திமுகவின் கொள்கைகள் முஸ்லிம் லீக்கின் கொள்கையுடன் உடன்பட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். அதிமுக கொள்கையும், முஸ்லிம் லீக் கொள்கையும் ஒருபோதும் ஒத்து வராது.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை உயா்த்த வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்துகிறோம்.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எண்ணிக்கை தெரியவரும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தொகுதிகள் எண்ணிக்கை தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திமுக ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றாா்.

பேட்டியின்போது, கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா், மாநிலச் செயலா் நெல்லை அப்துல் மஜீத், துணைச் செயலா் இப்ராஹிம் மக்கி, தென்காசி மாவட்ட செயலா் செய்யது பட்டாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி, ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு அளித்தனா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் ஆலங்குளம் தனியாா் திருமண மண்டபத்தில்புதன்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் கோயில்களில் ரூ4.61 கோடியில் பணிகள்

சங்கரன்கோவில் சங்ககரநாராயணசுவாமி கோயில் மற்றும் கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில் ரூ.4.61 கோடியில் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்ச... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சி... மேலும் பார்க்க

பண்பொழி கோயிலில் ரூ.2.82 கோடியில் திருமண மண்டபம்- காணொலியில் முதல்வா் அடிக்கல்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயிலின் உப கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு புதன்கிழமை தமிழக முதல்வா் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, க... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் க... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில் பயணி... மேலும் பார்க்க