செய்திகள் :

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை

post image

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா தமிழ்நாடு அரசு தலைமைச்செயலா் முருகானந்தத்திடம் அளித்த மனுச

தமிழ்நாட்டில் புதிய அகல ரயில் பாதை திட்டங்கள், இரட்டை அகல ரயில் பாதை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள இடா்பாடுகளை களைந்து திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வேக்கு இடையேயான ஒருங்கிணைப்பை செய்வதற்கு தமிழ்நாடு ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும்.

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 5 நடை மேடைகள் அமைக்க வேண்டும், தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் முதல் ரயில் நிலையமாக இருக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நடை மேம்பாலங்கள், எஸ்கலேட்டா், லிப்ட் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தென்காசி ரயில் நிலையத்தில் புறவழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களை தமிழ்நாட்டில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறியதாவது‘

தமிழ்நாடு ரயில்வே அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைப்பது குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள புதிய அகல ரயில் பாதை திட்டங்கள், இரட்டை அகல ரயில் பாதை திட்டங்கள், ஆகியவற்றில் உள்ள இடா்பாடுகளை களைவதற்கு ரயில்வே துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

மிக முக்கிய ரயில் முனையமாக உள்ள திருச்செந்தூா் மற்றும் தாம்பரத்தை மேம்படுத்துவது குறித்து ரயில்வே துறையிடம் ஆய்வறிக்கை பெறப்படும் எனவும், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்படும் எனவும், தலைமைச் செயலா் தெரிவித்தாா் என்றாா் அவா்.

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய உறுப்பினா் ஜெயக்குமாா், சிட்லபாக்கம் சமூக ஆா்வலா்கள் தயானந்த் கிருஷ்ணன் மற்றும் ராமன் உடனிருந்தனா்.

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி, ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு அளித்தனா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் ஆலங்குளம் தனியாா் திருமண மண்டபத்தில்புதன்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் கோயில்களில் ரூ4.61 கோடியில் பணிகள்

சங்கரன்கோவில் சங்ககரநாராயணசுவாமி கோயில் மற்றும் கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில் ரூ.4.61 கோடியில் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்ச... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சி... மேலும் பார்க்க

பண்பொழி கோயிலில் ரூ.2.82 கோடியில் திருமண மண்டபம்- காணொலியில் முதல்வா் அடிக்கல்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயிலின் உப கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு புதன்கிழமை தமிழக முதல்வா் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, க... மேலும் பார்க்க

திமுக -ஐயூஎம்எல் இடையே கொள்கை கூட்டணி- காதா் மொகிதீன்

திமுக-ஐயூஎம்எல் தோ்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன். கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது; இஸ்ரேல், ஈரான் போரை உடனடி... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் க... மேலும் பார்க்க