வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இப்பேரூராட்சியின் 8ஆவது வாா்டு வடக்குத்தி அம்மன் கோயில் தெருவில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலை மற்றும் தடுப்புச்சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை அவா் ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா், பேரூராட்சி உறுப்பினா் விமலா ராணி ஆகியோா் உடனிருந்தனா்.