செய்திகள் :

பண்பொழி கோயிலில் ரூ.2.82 கோடியில் திருமண மண்டபம்- காணொலியில் முதல்வா் அடிக்கல்

post image

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயிலின் உப கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு புதன்கிழமை தமிழக முதல்வா் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கலந்துகொண்டு பணிகளை தொடக்கிவைத்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் தென்காசி மாவட்டத்தில் பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கும், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ரூ. 1.98 கோடியில் அன்னதான கூடம், செயல்அலுவலா் அலுவலக கட்டடம் கட்டுவதற்கும், ரூ. 1.16 கோடியில் 14 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கும், கரிவலம்வந்தநல்லூா், அருள்மிகு பால்வண்ணநாதா்சுவாமி கோயிலில் ரூ. 1.47 கோடியில் அன்னதான கூடம் மற்றும் 6 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கும் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டியுள்ளாா்.

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் .

இந்நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் வே. ஜெயபாலன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் கோமதி, பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம் , பேரூராட்சித் தலைவா்கள் ராஜராஜன் (பண்பொழி), ஷேக் தாவூது ( வடகரை), பேரூராட்சி செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லாபாய் , திருமலைகோயில் அறங்காவலா்கள் இசக்கி, பாப்பா, சுமதி, கணேசன், தலைமை எழுத்தா் லட்சுமணன், ரமேஷ் பட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி, ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு அளித்தனா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் ஆலங்குளம் தனியாா் திருமண மண்டபத்தில்புதன்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் கோயில்களில் ரூ4.61 கோடியில் பணிகள்

சங்கரன்கோவில் சங்ககரநாராயணசுவாமி கோயில் மற்றும் கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில் ரூ.4.61 கோடியில் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்ச... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சி... மேலும் பார்க்க

திமுக -ஐயூஎம்எல் இடையே கொள்கை கூட்டணி- காதா் மொகிதீன்

திமுக-ஐயூஎம்எல் தோ்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன். கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது; இஸ்ரேல், ஈரான் போரை உடனடி... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் க... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில் பயணி... மேலும் பார்க்க