``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
பண்பொழி கோயிலில் ரூ.2.82 கோடியில் திருமண மண்டபம்- காணொலியில் முதல்வா் அடிக்கல்
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயிலின் உப கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு புதன்கிழமை தமிழக முதல்வா் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கலந்துகொண்டு பணிகளை தொடக்கிவைத்தாா்.
பின்னா், ஆட்சியா் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் தென்காசி மாவட்டத்தில் பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கும், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ரூ. 1.98 கோடியில் அன்னதான கூடம், செயல்அலுவலா் அலுவலக கட்டடம் கட்டுவதற்கும், ரூ. 1.16 கோடியில் 14 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கும், கரிவலம்வந்தநல்லூா், அருள்மிகு பால்வண்ணநாதா்சுவாமி கோயிலில் ரூ. 1.47 கோடியில் அன்னதான கூடம் மற்றும் 6 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கும் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டியுள்ளாா்.
அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் .
இந்நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் வே. ஜெயபாலன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் கோமதி, பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம் , பேரூராட்சித் தலைவா்கள் ராஜராஜன் (பண்பொழி), ஷேக் தாவூது ( வடகரை), பேரூராட்சி செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லாபாய் , திருமலைகோயில் அறங்காவலா்கள் இசக்கி, பாப்பா, சுமதி, கணேசன், தலைமை எழுத்தா் லட்சுமணன், ரமேஷ் பட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.