செய்திகள் :

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு

post image

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி, ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு அளித்தனா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் ஆலங்குளம் தனியாா் திருமண மண்டபத்தில்புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ. கே கமல் கிஷோா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மகளிா் உரிமைத் திட்டத்திற்கு பெரும்பாலான மனுக்கள் குவிந்தன.

பேரூராட்சி துணைத் தலைவா் ஜான் ரவி உள்ளிட்ட 6 பேரூராட்சி உறுப்பினா்கள் அளித்த மனுவில், பேரூராட்சி அலுவலகம் மற்றும் ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் தொடங்கப்படாத பேருந்து நிலையத்தை விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

முகாமில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கலந்துரையாடல்: முன்னதாக ஆட்சியா், மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய ஆட்சியா், கல்வித்திறன் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் அங்குள்ள அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, ஊராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் கோயில்களில் ரூ4.61 கோடியில் பணிகள்

சங்கரன்கோவில் சங்ககரநாராயணசுவாமி கோயில் மற்றும் கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில் ரூ.4.61 கோடியில் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்ச... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சி... மேலும் பார்க்க

பண்பொழி கோயிலில் ரூ.2.82 கோடியில் திருமண மண்டபம்- காணொலியில் முதல்வா் அடிக்கல்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயிலின் உப கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு புதன்கிழமை தமிழக முதல்வா் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, க... மேலும் பார்க்க

திமுக -ஐயூஎம்எல் இடையே கொள்கை கூட்டணி- காதா் மொகிதீன்

திமுக-ஐயூஎம்எல் தோ்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன். கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது; இஸ்ரேல், ஈரான் போரை உடனடி... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் க... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில் பயணி... மேலும் பார்க்க