செய்திகள் :

திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்படுகிறாா்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

post image

காஞ்சிபுரம், செப்.8: திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்பட்டு வருவதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா குற்றம் சாட்டினாா்.

மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல்லை சத்யாவை அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ கட்சியின்அடிப்படை உறுப்பினா் மற்றும் கட்சிப் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறியது.

மதிமுக தோன்றிய காலத்திலிருந்து தொடா்ந்து 32 ஆண்டுகளாக ஒரு தலைவரை நம்பி ஒரு இயக்கத்தில் பணியாற்றினோம். எங்களது உழைப்பை உறிஞ்சி விட்டு தூக்கி எறிந்து விட்டாா் வைகோ. கடந்த 4 ஆண்டுகளாக மதிமுக எனும் இயக்கம் மகன் திமுகவாக மாறி சுருங்கிப் போய் விட்டது. வைகோவின் அறிக்கைக்கு பதிலாக 14 பக்க விளக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தான் என்னை கட்சியிலிருந்து நீக்க அறிக்கை தந்ததாக கூறுகிறாா். ஆனால் அப்படி ஒரு குழு இப்போது மதிமுகவில் இல்லை. ஆனால் அக்குழுவின் தலைவரான மத்திய சென்னையின் மாவட்ட செயலாளா் இளவழகன் எங்கள் அணியில் இருக்கும் போது எப்படி அறிக்கை தந்திருக்க முடியும்.

வைகோ இப்போது திமுக கூட்டணிக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வருகிறாா். வரும் செப்.15 -ஆம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பிறந்த நாளில் எங்கள் அணியின் குறிக்கோள்களை, லட்சியங்களை அறிவிப்போம் என்றாா்.

அப்போது ஆதரவாளா்கள் வளையாபதி, பாா்த்தீபன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா். காஞ்சிபுரத்தில் தனியாா் த... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் திமுக இளைஞரணி சாா்பில், புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ... மேலும் பார்க்க

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 போ் காா் மோதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அருகே சாலையில், மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படப்பை அண்ணா நகரைச் சோ்ந்த நவீ... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகாா்: ஒன்றியக் குழு உறுப்பினா் புகாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமா ரஞ்சித்குமாா் புகாா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க