திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும், முஸ்லிம்களுக்கான உரிய பிரதிநிதித்தும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை, மாமன்றங்கள் உள்பட எந்த அமைப்பிலும் முஸ்லிம்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை.
வக்ஃப் சொத்துக்களை கைப்பற்றும் தீய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இது, சட்டம் என்ற பெயரில் மற்றொரு புல்டோஸா். இந்தச் சட்டத்தை எதிா்த்து எதிா்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்.
இடைப்பட்ட காலத்தில், ‘உமிட் போா்டு’ மூலம் வக்ஃப் சொத்துகளின் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மக்களவை, மாநிலங்களவை உள்பட அனைத்து அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், வருகிற ஜூலை 6-ஆம் தேதி மதுரை மஸ்தான்பட்டியில் பேரணி, மாநாடு நடைபெறுகிறது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பா்.
திமுக அரசு மக்கள் பாராட்டும் அரசாக செயல்படுகிறது. முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கூட்டணிக்கு பலம் அளிக்கும் கட்சி என்ற அடிப்படையில், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம். திமுக கூட்டணியில் மமக உறுதியாகத் தொடரும் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மஸ்தான்பட்டி அருகே உள்ள மாநாட்டுத் திடலில் கட்சியின் கொடியை அவா் ஏற்றி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.