செய்திகள் :

திரிபுராவில் கனமழைக்கு 118 குடும்பங்கள் பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

தெற்கு திரிபுரா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் இன்று(ஜூலை 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முஹுரி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை விட (15.70 மீட்டர்) அதிகமாகப் பாய்ந்து, கரையின் இருபுறமும் வெள்ளத்தில் மூழ்கியது.

திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழை காணமாக பெலோனியா மற்றும் சாந்திர்பஜார் துணைப்பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

118 குடும்பங்களைச் சர்ந்த 289 பேர் 10 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெற்கு திரிபுரா மாவட்ட நீதிபதி முகமது சஜாத் தெரிவித்தார்.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் மாணிக் சஹா மாவட்டத்தில் வெள்ள நிலைமை குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் தெற்கு திரிபுரா மாவட்டத்திற்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' மற்றும் கோமதி மற்றும் செபாஹிஜாலா மாவட்டங்களுக்கு புதன்கிழமை 'மஞ்சள் எச்சரிக்கை' வெளியிட்டுள்ளது.

Over 100 families have been rendered homeless after their dwellings were inundated in a flash flood in South Tripura district, officials said on Wednesday.

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க

ரூ.2 ஆயிரம் கடனுக்காக இளைஞர் கொலை: தில்லியில் அதிர்ச்சி!

தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ஃபர்தீன்... மேலும் பார்க்க

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க