செய்திகள் :

திரிபுராவில் கனமழைக்கு 118 குடும்பங்கள் பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

தெற்கு திரிபுரா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் இன்று(ஜூலை 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முஹுரி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை விட (15.70 மீட்டர்) அதிகமாகப் பாய்ந்து, கரையின் இருபுறமும் வெள்ளத்தில் மூழ்கியது.

திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழை காணமாக பெலோனியா மற்றும் சாந்திர்பஜார் துணைப்பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

118 குடும்பங்களைச் சர்ந்த 289 பேர் 10 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெற்கு திரிபுரா மாவட்ட நீதிபதி முகமது சஜாத் தெரிவித்தார்.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் மாணிக் சஹா மாவட்டத்தில் வெள்ள நிலைமை குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் தெற்கு திரிபுரா மாவட்டத்திற்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' மற்றும் கோமதி மற்றும் செபாஹிஜாலா மாவட்டங்களுக்கு புதன்கிழமை 'மஞ்சள் எச்சரிக்கை' வெளியிட்டுள்ளது.

Over 100 families have been rendered homeless after their dwellings were inundated in a flash flood in South Tripura district, officials said on Wednesday.

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப... மேலும் பார்க்க

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க