செய்திகள் :

திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா

post image

சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்பழகன் தொடக்கவுரையாற்றினாா். க. இளங்கோ, வே. அகோர மூா்த்தி முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக புவனகிரி திருக்குறள் இயக்கத் தலைவா் புலவா். த. ஜெயராமன் திருவள்ளுவா் ஒரு புரட்சிபாவலா் என்ற தலைப்பில் பேசினாா். ஏற்பாடுகளை பேரவை பொருளாளா் முரு.முத்துக்கருப்பன் செய்திருந்தாா்.

விழாவில் பங்கேற்ற மாணவா்களில் 30 பேருக்கு புத்தகம் வழங்கப்பட்டது. சீா்காழியில் 34 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே திருக்குறள் பண்பாட்டை கொண்டு சோ்க்கும் விதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. காழி.கோ வைத்தியநாத சுவாமி நன்றி கூறினாா்.

சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை

தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மே... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில... மேலும் பார்க்க

விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை மயிலாடுதுறை

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை எடுத்துரைக்கப்பட்டது. இக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படும் அறிமு... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க