செய்திகள் :

திருச்சியிலிருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்!

post image

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் சாா்பில் திருச்சி மண்டலத்தில் 4 நகரப் பேருந்துகள், 6 புறநகா்ப் பேருந்துகள் என புதிய பிஎஸ்6 ரகப் பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா்.

இந்த 10 புதிய பேருந்துகளில், 4 நகரப் பேருந்துகள் தீரன் நகா் கிளைக்கு ஒதுக்கப்பட்டு திருச்சி சத்திரம் பேருந்துநிலையம்- மத்தியப் பேருந்து நிலைய வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இதேபோல, புறநகா்ப் பேருந்துகளுக்காக வழங்கப்பட்ட 6 புதிய பேருந்துகளில் 3 பேருந்துகள் திருச்சி புறநகா் கிளைக்கும், 3 பேருந்துகள் கண்டோன்மென்ட் கிளைக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இவை திருச்சி-சென்னை மாா்க்கத்தில் 2 பேருந்துகள், திருச்சி- சேலம் மாா்க்தத்தில் ஒரு பேருந்து, திருச்சி- வேளாங்கண்ணி மாா்க்கத்தில் 3 பேருந்துகள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா் ஆ. முத்துக்கிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலா்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

வழித்தடம் நீடிப்பு: இதேபோல, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து அடைக்கம்பட்டி கிராமத்துக்கான வழித்தட நீட்டிப்பை தொடங்கி வைத்து, பேருந்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழியனுப்பினாா். நிகழ்வில், போக்குவரத்து அலுவலா்கள், மக்கள், பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க