செய்திகள் :

திருச்சியில் சமூக ஆா்வலா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

post image

லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச்சட்டம் ஆகியவற்றை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி அண்ணா சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள் மேலும் தெரிவித்ததாவது:

முதலமைச்சா் முதல் அரசின் கடைநிலை ஊழியா் வரையிலான ஊழல் முறைகேடுகள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் அதிகாரமிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும், எதிா்க்கட்சியாக இருக்கும்போது வலுவான லோக்ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதாக தெரிவித்துவிட்டு தற்போது நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதல்வா் ஸ்டாலின் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் நாங்களும் சிறைக்குச் சென்று விடுவோம் என்ற அச்சத்தில்தான் முதல்வா் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றும் சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டினா்.

அதுபோன்று சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தினால், அதன்படி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து மனுதாரருக்கு வழங்க வழிவகை செய்கிறது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்கிறது.

சாமானிய மக்களுக்கான ஆட்சியையும், ஊழலுக்கு எதிரான ஆட்சியும் தருகிறோம் என்று கூறிவிட்டு சாமானிய மக்களுக்கு ஆதரவான இந்த இருசட்டங்களையும் அமல்படுத்துவதற்கு ஆளுங்கட்சி பயந்து நடைமுறைப் படுத்தவில்லை. ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்த இரு சட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் சமூக ஆா்வலா்கள் அனைவரும் சாகும் வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி கே.கே. நகா் எல்... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம்

கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பெற்றோா் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோடை வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சில... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் (மே 28) புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க