செய்திகள் :

திருச்சியில் தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு

post image

திருச்சி: திருச்சியில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால், அங்கு வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து மத்திய மண்டல துணை இயக்குநா் முரளி, மாவட்ட அலுவலா்கள் வினோத் (திருச்சி), வடிவேல் (கரூா்), அனுஷ்யா பெரம்பலூா், கீா்த்தி (புதுக்கோட்டை) ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதையடுத்து தீயணைப்பு வீரா்களுக்கு மத்திய மண்டலப் பயிற்சிப் பள்ளி அமைக்க இருங்களூரில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும், சமயபுரம், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையங்களில் கட்டப்படும் புதிய கட்டடங்களையும் ஆய்வு செய்தாா்.

அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், தீயணைப்புத் துறைக்கு தேவைப்படும் கூடுதல் வசதிகளை செய்துகொடுக்கவும் தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி கழக செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவமனயில் நடைபெற்ற தீத் விபத்து தடுப்பு செயல்விளக்க பயிற்சி நிகழ்வில் பங்கேற்று, தீ விபத்து ஏற்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு எடுத்துரைத்தாா்.

ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்களிக்க வலியுறுத்தல்

திருச்சி: ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணல்: 23 ஆசிரியா்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணலில் 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 172 மாணவா்கள் தோ்வு

திருச்சி: திருச்சியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டியை சரி செய்யாத நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி: குளிா்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) சரி செய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்

திருச்சி: இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கிலாந்... மேலும் பார்க்க

பேக்கரி உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை

திருச்சி: திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளா் திங்கள்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சியை அடுத்த சா்க்காா்பாளையம் முல்லைக்காடு சுந்தா் நகரைச் சோ்ந்தவா் செல்... மேலும் பார்க்க