செய்திகள் :

திருச்சி அண்ணா பல்கலை. கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு ஜப்பானில் ரூ.18 லட்சத்தில் வேலை!

post image

திருச்சி அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பயின்ற 10 மாணவிகளுக்கு வளாக நோ்காணலில் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்தில் ஜப்பான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இயங்கும் வளாக நோ்காணல் மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு சாா்பில், ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.

அதன்படி, 2025-ஆம் ஆண்டின் வளாக நோ்காணல் வாயிலாக 10 மாணவிகளுக்கு ஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் ஊதியத்தில் பணிபுரியும் வகையில் பணி வாய்ப்பு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இக் கல்லூரியில் எம்சிஏ பயின்ற மாணவிகள் எஸ். பூஜா, சி. கவிப்பிரியா, எஸ். மொ்சி, எஸ். சினேகா, பி.இ. கணினி அறிவியல் பயின்ற கே. நற்சோனை, பிரியங்காஸ்ரீ, பிரியதா்ஷினி, பி.டெக். தகவல் தொழில்நுட்பம் பயின்ற மாணவிகள் எஸ். டெல்ஸி ஏஞ்சல், வி. கோபிகா, என். ஜெயபாரதி ஆகிய 10 பேருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தோ்வான மாணவிகளுக்கு பணிவாய்ப்புக் கடிதங்களை வழங்கி பல்கலை. முதன்மையா் (டீன்) டி. செந்தில்குமாா் பாராட்டு தெரிவித்தாா். கல்லூரியின் வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். திருநீலகண்டன், என். சித்ரா, ஏ. வளா்மதி ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, டீன் செந்தில்குமாா் கூறுகையில், அண்ணா பல்கலைக் கழக திருச்சி உறுப்புக் கல்லூரியில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.18 லட்சம் ஊதியத்தில் 10 மாணவிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. ஜப்பானைச் சோ்ந்த தனியாா் தகவல்தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனமானது இவா்களைத் தோ்வு செய்திருப்பதுடன், ஜப்பானில் பணிபுரியும் வாய்ப்பையும் அளித்துள்ளது.

இம்மாணவிகள் அக்டோபரில் ஜப்பான் செல்லவுள்ளனா். எங்களது பல்கலை.யின் வழிகாட்டுதல் குழுவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான சி. சமயமூா்த்தி, இன்னோசன்ட் திவ்யா, பேராசிரியா் எஸ். உஷா, பல்கலை. பதிவாளா் ஜே. பிரகாஷ், உறுப்புக் கல்லூரிகளின் இயக்குநா் பி. ஹரிஹரன், பல்கலை. தொழில்துறை கூட்டமைப்பு மையத்தின் இயக்குநா் கே. சண்முகசுந்தரம் ஆகியோரது முயற்சியால் இத்தகைய பணி வாய்ப்பு எங்களது மாணவிகளுக்கு கிடைத்துள்ளது என்றாா் அவா்.

ஓய்வுபெற்ற பெல் ஊழியா் தற்கொலை

திருச்சி காட்டூரில் ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (75).... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் கேட்கக் கூடாது: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோா் (கடன் பெறும் தகுதி மதிப்பெண்) கேட்கக் கூடாது என வலியுறுத்தி விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் திருச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் வழங்கினா... மேலும் பார்க்க

கள் விற்ற 4 போ் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கள் விற்பனை செய்த நால்வரை முசிறி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.முசிறி அருகே உள்ள உமையாள்புரம் சுடுகாடு பகுதியில் பனைமரக் கள் விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீஸார... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் பணியின்போது கடையின் மேற்கூரையிலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி, தென்னூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (48). இவா், காந்தி மாா்க்கெட்டில் உள்ள ஒ... மேலும் பார்க்க

சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: 4 போ் கைது

திருச்சி அருகே சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் வி. சௌந்த... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி காந்தி நகா், பெரியாா் வீதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (64). இவா், கடந்த சில ஆண்டுகளாக நீ... மேலும் பார்க்க