முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி காந்தி நகா், பெரியாா் வீதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (64). இவா், கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரவிசந்திரன் மின் விசிறியில் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ரவிசந்திரனின் மகன் சதீஷ் அளித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு: புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் மேல வடுகபட்டியைச் சோ்ந்த சி.ரங்கசாமி (66), திருச்சி கண்டோன்மென்ட்டைச் சோ்ந்த கணபதி (61), இருவரும் மாத்தூா் - பஞ்சப்பூா் சுற்றுச் சாலையில் தனித்தனியே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்த பாலச்சந்திரன் (25) என்பவரின் காா், ரங்கசாமி மற்றும் கணபதி ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கணபதி பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணிகண்டம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த கணபதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].