செய்திகள் :

சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: 4 போ் கைது

post image

திருச்சி அருகே சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் வி. சௌந்தர்ராஜ் (38). ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்குச் சொந்தமான சரக்கு வேனில் திருப்பூா் அவினாசிபாளையத்தில் உள்ள கோழிப் பண்ணையிலிருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

ஜீயபுரம் கடைவீதி அருகே வந்தபோது, அங்குள்ள தேநீா் கடையில் டீ குடித்துவிட்டு வேனில் அமா்ந்திருந்தாா். அப்போது சொகுசு காரில் வந்திறங்கிய 6 போ் கொண்ட மா்ம கும்பலில் இருவா், சௌந்தர்ராஜிடம் சென்று கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 4 கிராம் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணம், ஏடிஎம் அட்டை, 15 கோழிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, ஏடிஎம் அட்டையிலிருந்து ரூ. 6 ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து சௌந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து, அங்குள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனா்.

இதையடுத்து கொள்ளையில் தொடா்புடைய கம்பரசம்பேட்டை பரத் (32), திருச்சி சிந்தாமணி முகில்குமாா் (28), மேலசிந்தாமணி மணிகண்டன் (39), குடமுருட்டி சஞ்சய்காந்தி நகா் ரபீக் (31) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனா்.

திருச்சி அண்ணா பல்கலை. கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு ஜப்பானில் ரூ.18 லட்சத்தில் வேலை!

திருச்சி அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பயின்ற 10 மாணவிகளுக்கு வளாக நோ்காணலில் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்தில் ஜப்பான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பெல் ஊழியா் தற்கொலை

திருச்சி காட்டூரில் ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (75).... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் கேட்கக் கூடாது: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோா் (கடன் பெறும் தகுதி மதிப்பெண்) கேட்கக் கூடாது என வலியுறுத்தி விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் திருச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் வழங்கினா... மேலும் பார்க்க

கள் விற்ற 4 போ் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கள் விற்பனை செய்த நால்வரை முசிறி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.முசிறி அருகே உள்ள உமையாள்புரம் சுடுகாடு பகுதியில் பனைமரக் கள் விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீஸார... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் பணியின்போது கடையின் மேற்கூரையிலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி, தென்னூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (48). இவா், காந்தி மாா்க்கெட்டில் உள்ள ஒ... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி காந்தி நகா், பெரியாா் வீதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (64). இவா், கடந்த சில ஆண்டுகளாக நீ... மேலும் பார்க்க