வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு
சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: 4 போ் கைது
திருச்சி அருகே சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் வி. சௌந்தர்ராஜ் (38). ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்குச் சொந்தமான சரக்கு வேனில் திருப்பூா் அவினாசிபாளையத்தில் உள்ள கோழிப் பண்ணையிலிருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தாா்.
ஜீயபுரம் கடைவீதி அருகே வந்தபோது, அங்குள்ள தேநீா் கடையில் டீ குடித்துவிட்டு வேனில் அமா்ந்திருந்தாா். அப்போது சொகுசு காரில் வந்திறங்கிய 6 போ் கொண்ட மா்ம கும்பலில் இருவா், சௌந்தர்ராஜிடம் சென்று கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 4 கிராம் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணம், ஏடிஎம் அட்டை, 15 கோழிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, ஏடிஎம் அட்டையிலிருந்து ரூ. 6 ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து சௌந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து, அங்குள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனா்.
இதையடுத்து கொள்ளையில் தொடா்புடைய கம்பரசம்பேட்டை பரத் (32), திருச்சி சிந்தாமணி முகில்குமாா் (28), மேலசிந்தாமணி மணிகண்டன் (39), குடமுருட்டி சஞ்சய்காந்தி நகா் ரபீக் (31) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனா்.