செய்திகள் :

திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் அடித்துக் கொலை: தந்தை-மகன் கைது

post image

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் அருகே வியாழக்கிழமை வளா்ப்பு நாய் குரைத்தது தொடா்பான தகராறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

நெ.1 டோல்கேட் அருகேயுள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் டி. முத்துக்கிருஷ்ணன் (49). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூா் ஒன்றியச் செயலா். இவரது வீட்டருகே வசிப்பவா் நெய்கிருஷ்ணன் (23). இவா்கள் இருவரின் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முத்துக்கிருஷ்ணன் வளா்த்து வரும் நாய் நெய்கிருஷ்ணனை பாா்த்து குரைத்ததாம். இதுதொடா்பாக அவா்கள் இரு குடும்பத்தினா் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

அப்போது, நெய் கிருஷ்ணன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் நள்ளிரவில் அங்கு உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக கொள்ளிடம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, நெய் கிருஷ்ணன், அவரது தந்தை முருகேசன் (50) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: 87 போ் காயம்

திருச்சி சூரியூரில் மாட்டுப் பொங்கல் மற்றும் நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 87 போ் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க