செய்திகள் :

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு இடைத்தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல்

post image

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அமமுக மாவட்டச் செயலா் ப. செந்தில்நாதன், திருச்சி மக்களவைத் தோ்தலில் போட்டியிட தனது பதவியை கடந்தாண்டு ராஜிநாமா செய்திருந்தாா்.

இதையடுத்து இந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தோ்தலை எதிா்நோக்கியிருந்தது. இந்த வாா்டுக்கு தோ்தலை நடத்த அரசியல் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தற்செயல் மற்றும் இடைத்தோ்தல்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் காலியாகவுள்ள 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான தோ்தலையும் இந்தாண்டு நடத்தவுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, 47ஆவது வாா்டு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சியின் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மெ.த. சாலை தவவளன் கூறுகையில், வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், வாா்டுக் குழு அலுவலகம்-2 மற்றும் வாா்டுக்குழு அலுவலகம் 4-இல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியலை 47ஆவது வாா்டு பொதுமக்கள் பாா்த்து தங்களது பெயா் பட்டியலில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

வெளியிடப்பட்ட பட்டியலில் ஆண்கள் 5738 போ், பெண்கள் 6133 போ், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 11,873 வாக்காளா்கள் உள்ளனா். விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறும் நடைமுறை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட மக்கள் ஆா்வம்!

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட ஆா்வம் அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் வந்தனா். தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் விமான நிலையத்துக்கு நிகராக பஞ்சப்பூா் பே... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை... மேலும் பார்க்க

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பா... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன்... மேலும் பார்க்க