திருச்செங்கோட்டில் அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு அபராதம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில், அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மரு.தங்கவிக்னேஷ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், சாலையோரக் கடைகள், பேக்கரி மற்றும் டீ கடைகள் அனைத்திலும் அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, திருச்செங்கோடு நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் மஞ்சுளா, திருச்செங்கோடு பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள உணவு விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்தாா். அப்போது, அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் உணவுப் பொருள்களை பாா்சல் செய்து வழங்குவதற்கு வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என்றும், அச்சடித்த தாள்கள், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.