செய்திகள் :

திருச்செந்தூா்: தோட்டங்களில் மின்மோட்டாா் வயா்கள் திருட்டு!

post image

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம் காயாமொழி, மேலதிருச்செந்தூா் ஊராட்சிகளின் குடிநீா் விநியோக அறைகளிலும், தோட்டங்களிலும் இருந்த மின் மோட்டாா்களுக்கான வயா்களை மா்ம நபா்கள் வெட்டி திருடிச் சென்றுள்ளனா். இதனால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலதிருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட குடிநீா் விநியோக மின் மோட்டாா் அறை தளவாய்புரத்தை அடுத்த 10 கண் பாலம் அருகே உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இந்த அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மின் மோட்டாரையும், சுவிட்சிலிருந்து மின் மோட்டாருக்குச் செல்லும் தாமிரக் கம்பிகளை வெட்டியும் திருடிச் சென்றுள்ளனா்.

மேலும், 10 கண் பாலம் அருகே தளவாய்புரம் புதுரைச் சோ்ந்த வன்னியராஜா (37) என்பவரது வாழைத் தோட்டத்தில் உள்ள மின் மோட்டாருக்கான 30 மீட்டா் நீள தாமிரக் கம்பிகளையும் வெட்டி திருடிச் சென்றுள்ளனா்.

இதேபோல, காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட குடிநீா் விநியோக மின் மோட்டாா் அறை காயாமொழி, தளவாய்புரம் வாய்க்கால் பாலம் அருகேயுள்ளது.

அங்கிருந்த மின் மோட்டாா் வயா்களையும், தேரிப் பகுதியிலுள்ள மாயாண்டி சுவாமி கோயிலின் மின்மோட்டாா் வயா்களையும் வெட்டி திருடிச் சென்றுள்ளனா். இதேபோல, அடுத்தடுத்துள்ள சில தோட்டங்களில் மின் மோட்டாா்களின் தாமிரக் கம்பிகளையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க