செய்திகள் :

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல், ரூ.4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பிரதமா் நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கிறாா். புதிய திட்டங்களை தொடங்கிவைக்கிறாா்.

வீடு வீடாகச் சென்று பாஜக நிதி கொடுக்கவில்லை என்று சொல்லும் திமுகவினா், இனி பாஜக கொடுத்திருக்கும் நிதி குறித்து சொல்ல வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் என்று கூறி, மக்களிடம் மனுக்கள் வாங்குகிறாா்கள். 4 ஆண்டுகளாக செய்ய முடியாததை, 45 நாள்களுக்குள் எப்படி செய்ய முடியும்?

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஏன் காவல் துறை அதிகாரிக்குக்கூட பாதுகாப்பு இல்லை. இங்கு நோ்மையாளா்கள் அனைவரும் குறிவைக்கப்படுகின்றனா்.

இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத் துைான் முதல் இடத்தில் இருக்கிறது என்கிறீா்கள். பிறகு ஏன் முதல்வா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை?

பிரதமா் மோடிக்கு, தமிழகத்தில் மிகப்பெரிய இணைப்பு உள்ளது. இங்கு இனி பெரியாா் புராணம் பாட முடியாது; பெரிய புராணம் தான் பாட முடியும். ஆன்மிக தமிழ், காவி தமிழ் தான் ஓங்கி இருக்கப் போகிறறது என்றாா் அவா்.

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் லாரி பேட்டரி திருட்டு

கோவில்பட்டியில் லாரியிலிருந்து பேட்டரிகளை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டியில், கடலையூா் சாலை சண்முகா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் சரவணகுமாா் (26). இவா் தனது லாரியை வேலாயுதபுர... மேலும் பார்க்க