செய்திகள் :

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

post image

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் வாக்குரிமை பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"சமத்துவம் பற்றி பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், இப்போது பாஜக - ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைந்திருக்கிறார். அவருக்கான அந்த சமத்துவ கொள்கை எங்கு போனது? ஏனெனில் பாஜகவின் மடியில் அவர் அமர்ந்திருக்கிறார். ஆர்எஸ்எஸ்-பாஜக இறுதியில் நிதீஷ் குமாரை தூக்கி எறியும்.

பிகாரில் வாக்குரிமை பேரணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதுமே இதைப்பற்றி பேசுகிறார்கள். அதை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் பிகார் மக்களும் எங்கள்(மகாகத்பந்தன்) கூட்டணியும் பின்வாங்கவில்லை.

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வாக்குகளைத் திருடுகிறார், அடுத்து வங்கிகளை கொள்ளையடிப்பவர்களை பாதுகாப்பதன் மூலமாக பணத்தைத் திருடுகிறார்.

வாக்குத் திருட்டு மூலமாக பிகாரில் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார். அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை எனில் மோடியும் அமித் ஷாவும் உங்களை அடக்கிவிடுவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இரட்டை என்ஜின் அரசு இன்னும் சில மாதங்களில் கவிழும். பதிலாக ஏழைகளின், பெண்களின், தலித்துகளின், பிற்படுத்தப்பட்டோரின் அரசு அமையும்" என்று பேசியுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

Congress President Mallikarjun Kharge targets PM Modi that he has a habit of stealing

ஜிஎஸ்டி வரி: செப்டம்பரில் மின்னணு பொருள்கள், கார் விற்பனை மந்தமாகவே இருக்கும்!

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு வருகிற செப். 22 முதல்தான் அமலுக்கு வருவதால் அதுவரை மின்னணு பொருள்கள் மற்றும் வாகனங்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதார... மேலும் பார்க்க

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க