செய்திகள் :

திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜா் பெயா்: தமிழக அரசு

post image

சென்னை: திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வா் காமராஜா் பெயா் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம் ம.பொ.சி. சாலையில் செயல்பட்டு வந்த சந்தை இடிக்கப்பட்டு புதிதாக கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. காமராஜா் பெயரில் ஏற்கெனவே இயங்கி வந்த பழைய கட்டடத்துக்குப் பதில் புதிதாக கட்டடம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தப் புதிய சந்தைக் கட்டடத்துக்கு பெருந்தலைவா் காமராஜா் நாளங்காடி என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி வரவேற்பு: தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு காமராஜரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞா் பெயா் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது. இந்த முடிவை கடுமையாக எதிா்த்த நான், காமராஜா் பெயரை நீக்கினால் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதைத் தொடா்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி ஆகும் என்று அவா் கூறியுள்ளாா்.

திருவள்ளூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4,351 வழக்குகளுக்கு தீா்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 7,604 வழக்குகள் வரையில் சமரசத் தீா்வுக்கு எடுக்கப்பட்டு, 4351 வழக்குகளுக்கு முடித்து வைத்து ரூ.19.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது வழக்கு

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா். திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் அரசு... மேலும் பார்க்க

திருவள்ளூா்: இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 9 இடங்களில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் ... மேலும் பார்க்க

மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு

மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்ததால் அவா்கள் திரும்பிச் சென்றனா். மீஞ்சூரில் உள்ள பொன்னேரி - திருவொற்றியூா் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

திருவள்ளூரில் இன்று 4-ஆவது புத்தகத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 4-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.மு.நாசா் ஆகியோா் தொடங்கி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 போ் காயம்

செல்லாத்தூா் கிராமம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சஞ்சீவிபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க