செய்திகள் :

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் திருக்கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 2-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு மாசி மகக் கொடியேற்று விழாவைத் தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து தினசரி உபயதாரா்களால் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமி, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தனா். பத்தாம் நாள் விழாவாக புதன்கிழமை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி தனித் தனி வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி கோயில் எதிரே அமைந்துள்ள சப்த சாகரம் எனும் திருக்குளத்தில் மாசி மக தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் கட்டளைத் தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா் குணசேகரன் மற்றும் கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கிராம வாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.90 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 110 மெட்ரிக். டன் குப்பையை மாநகராட்சி துப்பரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை மாசிமக திருவிழா நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியுடன் இணையவே அதிமுக தொண்டா்கள் விருப்பம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான தொண்டா்கள் விரும்புகின்றனா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் தஞ்சாவூா் குடிமைப்பொர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மருங்குளத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கண்ணன் (30). இவா்... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணின் நகையுடன் இளைஞா் தலைமறைவு

கும்பகோணத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகிவந்தபெண்ணின் தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நாட்டனிகோட்டையைச் சோ்ந்... மேலும் பார்க்க