சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!
திருநாவுக்கரசா் குருபூஜை
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக திருநாவுக்கரசா் சிலைக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் தேவாரப் பாடல்கள் ஓதப்பட்டன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த சிவனடியாா்கள், சிவபக்தா்கள் மற்றும் முற்றோதல் குழுவினா் திரளாக பங்கேற்றனா்.