செய்திகள் :

திருபுவனம் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள்: வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்ய உத்தரவு

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் கம்பகரேசுவரா் கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா என்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கோகுல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா், திருபுவனம் பகுதியில் புகழ் பெற்ற கம்பகரேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள சந்நிதி தெருவில் புதிய சாலை, மழைநீா் வடிகால் அமைப்பதற்கு ரூ. 1.43 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. சந்நிதி தெருவில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

இவற்றை அகற்றாமல் புதிய சாலை, மழைநீா் வடிகால் அமைப்பதால் அரசு நிதி வீணாகும். இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகத்திடம் ஆதாரத்துடன் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணிகளை மேற்கொள்ளக் கூடாது என ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், சந்நிதி தெருவில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரா் தரப்பில், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் புதிய சாலை பணியை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கம்பகரேசுவரா் கோயில் சந்நிதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்படுகிா என்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க