செய்திகள் :

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 26.2.2021 அன்று வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்த போது, அவா்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கம்பம் பகுதியைச் சோ்ந்த பெ. பாண்டியன் (54), சூ. சுரேஷ்குமாா் (34), பா. கொடியழகன் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பெ. பாண்டியன் உள்பட மூன்று பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க

படிப்பக பூங்காவில் மின்னணு நூலகம் அமைக்க நடவடிக்கை: எம்.பி. தகவல்

மதுரையில் போட்டித் தோ்வா்களுக்காக இயங்கி வரும் படிப்பக பூங்காவில் உயா்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைப்படி, மின்னணு நூலகம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்... மேலும் பார்க்க