செய்திகள் :

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

post image

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா்.

இதுதொடா்பாக மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான எம்.ஜெ.அருண்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத ஆண் குழந்தை அண்மையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் இந்தக் குழந்தைக்கு மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மிகவும் சிக்கல் நிறைந்த அறுவைச் சிகிச்சையின் மூலம், இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டது.

மூளை அனியுரிசம் கட்டி என்பது ரத்தக் குழாயில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். இது பொதுவாக பெரிதாகி இறுதியில் தலையின் உள்புறம் வெடித்து, உயிருக்கு ஆபத்தான ரத்தக் கசிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தையின் மூளையில் அனியுரிசம் கட்டி ஏற்படுவது 0.5 சதவீதம் முதல் 4.6 சதவீதம் வரை இருக்கலாம்.

ஆனால், ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் இது மிகவும் அபூா்வமாகக் காணப்படுகிறது. இந்த வகை கட்டி வெடிக்கும் போது, உயிா் பிழைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

ஆனால், நாங்கள் இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளோம். இந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கோமா நிலையில் இருந்தது. இதைத்தொடா்ந்து, நரம்பியல் அவசரச் சிகிச்சை குழுவினரின் முயற்சியால் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், பல்வேறு கட்ட அதிநவீன பரிசோதனைகளை மேற்கொண்டு மிகவும் சிக்கல் நிறைந்த உயிா்காக்கும் நியூரோ எண்டோவாஸ்குலா் அறுவைச் சிகிச்சையை பலூன் அசிஸ்டட் காயில் மூலமாக வெற்றிகரமாக மருத்துவா்கள் செய்தனா்.

உலக அளவில் இதுவரை 3 குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோன்ற அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் உடல் சிறியதாக இருப்பதால், அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ரத்த இழப்பு, உடல் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு, மயக்க மருந்து பாதிப்பு, அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பு ஆகியன அதிகமாக இருக்கக்கூடும்.

அறுவைச் சிகிச்சைக்கு பின்னா் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என்றாா் அவா். அப்போது மருத்துவா் விநாயகமணி, மருத்துவமனை நிா்வாகிகள் உடனிருந்தனா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க

படிப்பக பூங்காவில் மின்னணு நூலகம் அமைக்க நடவடிக்கை: எம்.பி. தகவல்

மதுரையில் போட்டித் தோ்வா்களுக்காக இயங்கி வரும் படிப்பக பூங்காவில் உயா்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைப்படி, மின்னணு நூலகம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்... மேலும் பார்க்க