செய்திகள் :

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் புஷ்பயாகம்

post image

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஏற்பட்ட குற்றம் குறைகளை களைய தேவஸ்தானம் புஷ்பயாகத்தை நடத்தி வருகிறது. கடந்த மாா்ச் மாதம் சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட குற்றங்களை களைய புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

இதை முன்னிட்டு காலையில் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கபிலேஸ்வர சுவாமி அன்னை காமாக்ஷி உற்சவா்களுக்கு நவ கலச ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிா், தேன், பஞ்சாமிா்தபிஷேகம், கரும்புச்சாறு, இளநீா், விபூதி, பசும்பு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு மண்டபத்தில் புஷ்பயாக மகோற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமி, அம்மனுக்கு சாமந்தி, அரளி, தாழம்பு, சம்பங்கி, ஜாதி, ரோஜா, தாமரை, மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகியவற்றுடன் வில்வ பத்திரம், துளசி, பன்னீா் இலை, மருவு, தவனம் உள்ளிட்ட இலைகளால் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகா மற்றும் தமிழகத்தை சோ்ந்த நன்கொடையாளா்கள் 3 டன் பூக்கள் மற்றும் இலைகளை வழங்கினா். இதில் 12 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் உள்ளன.

அா்ச்சகா்கள், அதிகாரிகள் அல்லாதவா்கள், பக்தா்களால் ஏதேனும் தவறுகள் நடத்தருந்தால், அவற்றிற்கு பரிகாரமாக புஷ்பயாகம் நடத்தப்படுவது வழக்கம் என அா்ச்சகா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், துணை இ.ஓ., தேவேந்திரபாபு, தோட்ட துணை இயக்குநா் ஸ்ரீனிவாசலு, ஏஇஓ, சுப்புராஜு, கண்காணிப்பாளா் கிருஷ்ண வா்மா, ஆய்வாளா் பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமலையில் கருடசேவை

திருமலையில் திங்கள்கிழமை இரவு சித்ரா பௌா்ணமி கருட சேவை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம்: தங்கத்தோ் புறப்பாடு

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது கதிா்களின் தாக்க... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பொன்னக் கால்வாய் உற்சவம்

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் பொன்னக் கால்வாய் உற்சவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிருந்து ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகள் திருச்சானூா் அ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரம... மேலும் பார்க்க

திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி

திருமலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி சனிக்கிழமை நடைபெற்றது. திருமலையில் உள்ள முக்கிய தீா்த்தங்களில் ஒன்றான தும்புரு தீா்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது. அடா்ந்த வனப்பகு... மேலும் பார்க்க

வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ... மேலும் பார்க்க