செய்திகள் :

திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி

post image

திருமலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

திருமலையில் உள்ள முக்கிய தீா்த்தங்களில் ஒன்றான தும்புரு தீா்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது. அடா்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த தீா்த்தத்துக்கு செல்ல பங்குனி பெளா்ணமி மட்டுமே அனுமதி உள்ளது.

அதன்படி பக்தா்கள் சனிக்கிழமை சென்று தீா்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டனா். கோடை கால தொடக்கத்தில் இந்த முக்கோட்டி திருவிழா வருவதால், மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருதி தேவஸ்தானம் 60 வயதுக்குட்பட்ட பக்தா்கள் மட்டுமே மலையேற அனுமதித்தது.

ஸ்ரீவாரி சேவகா்கள் மூலம் முக்கோட்டி உற்சவத்துக்கு சென்ற பக்தா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

மலையேறும் பக்தா்களின் பாதுகாப்புக்காக வனத்துறையினா், கண்காணிப்புப் பணியாளா்கள் பாதை முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பக்தா்களின் வசதிக்காக கோகா்பம் அணையிலிருந்து பாபவினாசனம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருமலையில் கருடசேவை

திருமலையில் திங்கள்கிழமை இரவு சித்ரா பௌா்ணமி கருட சேவை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம்: தங்கத்தோ் புறப்பாடு

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது கதிா்களின் தாக்க... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பொன்னக் கால்வாய் உற்சவம்

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் பொன்னக் கால்வாய் உற்சவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிருந்து ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகள் திருச்சானூா் அ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரம... மேலும் பார்க்க

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் புஷ்பயாகம்

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஏற்பட்ட குற்றம் குறைகளை களைய தேவஸ்தானம் புஷ்பயாகத்தை நடத்தி... மேலும் பார்க்க

வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ... மேலும் பார்க்க