செய்திகள் :

திருப்பதி ரயில்கள் ரத்து: மாா்ச் 17 வரை நீட்டிப்பு

post image

திருப்பதி - காட்பாடி இடையே இயக்கப்படும் மெமு ரயில் ரத்து அறிவிப்பு மாா்ச் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாகும்பமேளாவுக்காக நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மெமு ரயில்களின் பெட்டிகள் தெற்கு மத்திய ரயில்வேக்குள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதில், திருப்பதி - காட்பாடி, காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாா்ச் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு இரவு 7.10-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 15-ஆம் தேதி வரையும், காலை 10.35-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 16-ஆம் தேதி வரையும், காலை 7.35-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும்.

காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு காலை 6.10, மாலை 5.15-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 16-ஆம் தேதி வரையும், இரவு 9.10-க்கு இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படும். காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பகல் 12.55-க்கும் இயக்கப்படும் ரயில் மாா்ச் 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க