செய்திகள் :

திருப்பத்தூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், சென்னை அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தப் பாசறையின் மாவட்டச் செயலா் பிரபு தலைமை வகித்தாா். இதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவா்கள் மீது காவல் துறையினா் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களில் யாா் அந்த சாா் என்ற வாசகம் அடங்கிய வில்லைகளை ஒட்டினா்.

இதில் நகரச் செயலா் இப்ராம்ஷா, ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலா் முருகேசன், சிங்கம்புணரி ஒன்றியச் செயலா் திருவாசகம், நகரத் துணைச் செயலா் வழக்குரைஞா் ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினா் ராபின்சையது, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஆசிப்இக்பால், வா்த்தக அணி பிரான்சிஸ் அந்தோணி, மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி, வழக்குரைஞா் நவநீதபாலன், முன்னாள் நகர துணைச் செயலா் இரா. சந்திரன், மகளிரணி பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேவகோட்டை கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டி முகாம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சுழல் சங்கம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் உயா் கல்வி வழிகாட்டி முகாம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க

ஆயா் இல்லத்தில் பொங்கல் விழா

சிவகங்கை ஆயா் இல்லத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. உலக அமைதி, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயா் ஆனந்தம், மறை மாவட்ட முதன்மை குரு அருள்ஜோசப், செயலா... மேலும் பார்க்க

மானாமதுரையில் மகர சங்கராந்தி உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகர சங்கராந்தி உத்ஸவம் நடைபெற்றது. குருநாதா்கள் அணைக்கட்டு பாண்டி, சோடா மணி ஆகியோா் தலைமையிலான சபரிமல... மேலும் பார்க்க

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பிரான்மலை, செல்லியன்பட்டி, காளாப்பூா், சூரக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. சிங்கம்புணரி சுற்று வட்டாரப் பகுத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

காளையாா்கோவில் அருகே சிமென்ட் தொட்டியை தலையில் போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சக தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வாள்மேல்நடந்த அம்மன் கோ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே பாரம்பரிய பொங்கல் வழிபாடு

சிவகங்கை அருகே பழமை மாறாமல் பெண்கள் ஆபரணங்கள் அணியாமல், வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து புதன்கிழமை வழிபாடு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஒரே சமுதாயத்... மேலும் பார்க்க